Friday, May 3, 2013

வில்லங்கம் பிடிச்ச விராட் கோலி


நீண்ட நாட்களாக இந்த மனுஷன் பற்றியும் இந்தாளின் வீர தீர செயல்கள் பற்றியும் எழுத வேண்டும் என்று நினைத்திருந்தேன். ஆனாலும் விறைத்து போய் நிற்கும் விராத்து கோழியின் ரசிகர்கள் சிலர் கொந்தளித்ததால் வேண்டாம் என்று நினைத்தேன். அப்போது காலமும் சரி இல்லை. ஆனால் அடக்க முடியாமல் சில விடயங்களை இப்போது கொட்டியே தீர வேண்டும் என்று வந்துள்ளேன்.

                (அண்ணல் கோழி குஞ்சின் பரிவாரங்கள் இப்போதே நடையை கட்டுதல் அழகு)

அவுட்டானால் துடுப்பை தூக்கி வீசுறது சதம் அடித்தால் அதே துடுப்புக்கு கிஸ் அடிக்கிறது இந்தாளின் வாடிக்கை. எதிரணி வீரர்களை மதிக்க தெரியாதவர் என்று ஏற்கனவே இவர் பெயர் பெற்றது மேலதிக சிறப்பு. இந்திய அணியின் கப்டன் தோனியால் கூட அறிவுரைக்கப்பட்டு பின்னர் கைவிடப்பட்ட கட்டுக்கடங்காத காளை. அளவுக்கு  அதிகமான திறமையை கொண்ட இந்த இளம் புயல் தன் அறிவு கெட்ட அலங்காரமான அசிங்கமான வெளிக்கள செயற்பாடுகளால் தன் தனித்துவத்தை இழந்து நிற்பது வேடிக்கையான விடயமாகும். களத்தில் சூடாக இருந்தால் பறவாயில்லை அடுத்தவனை சூடேற்றி பார்த்தால் அது உடம்புக்கு ஆகாது என்று இன்னமும் இந்த மனுஷனுக்கு விளங்கவே இல்லை. கடுப்பேற்றி கன்னத்தில் அறை வாங்கிய இவரின்  சக வீரர் சிறிசாந்த் கூட திருந்தி தற்போது அடக்கி வாசிக்கிறார்.  


கடந்த வருடம் அவுஸ்திரேலியாவில் ரசிகர்களை பார்த்து நடுவிரல் காட்டி ஊடங்கங்களால் ஊறவைத்து துவைத்து எடுக்கப்படார்.



 பின்னர் தனது ஆத்திர புத்தியே தான் ஆக்ரோசமாகவும் அதிரடியாகவும் விளையாட காரணம் என்று அறிக்கை விட்டார். அப்போ எனக்கு, கிறிஸ் கெயில், கில்கிறிஸ்ட் எல்லாம் மூஞ்சில பிளேட் போட்டுகொண்டா கிறவுண்டுக்கு வாறாங்க என்று கேட்க தோன்றியது.  இதெல்லாம் பரவாயில்லைங்க, அண்ணன் இம்முறை பெங்களூரு றோயல் சலஞ்சஸ் அணிக்கு நியமிக்கப்பட்டுள்ள இளம் கப்டன் வேறு. ஆரம்பத்தில் அடித்து நொருக்கினார். ஆனால் கடந்த நான்கு போட்டிகளில் டென்சன் தலைக்கேறி பந்துகளை எதிர்கொள்ள திணறுகிறார். அவுட் ஆகி மைதானத்தை விட்டு வெளியேறுகையில் பார்க்கணுமே 'முட்டை போடுவதுக்கு கோழி எப்படி கொக்கரிக்குமோ' அதைப்போல தலைவர் 'கொக்கரோ கோ' என்று நடையை கட்டுவார்.


எவ்வளவு திறமை இருந்தாலும் பணிவு, மைத்தனத்தில் நடந்துகொள்ளும் விதம் போன்ற பண்புகள் இல்லாவிட்டால் ரசிகர்கள் மனதில் இடம்பிடிக்க முடியாது என்பதற்கு இந்த இளம் புயல் ஒரு உதாரணம். கோலிக்கு ரசிகர்கள் இல்லையா என்று கேட்கலாம். இருகின்றார்கள். இந்தியாவில் இருக்கிறர்கள். வெளிநாட்டு ரசிகர்களால் இவரை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஏன் இந்தியாவில் கூட இவருக்கு எதிரிகள் நிறைய பேர் இருக்கிறார்கள் என்றால் பார்க்கவா வேண்டும்.  காரணம் ஒன்றே ஒன்று தான் அது மரியாதை அற்றவர் என்பதாகும். 
என்னை பொறுத்தவரை கோலி 200 சதம் அடித்தாலும் அகங்காரம், ஆணவம், அலங்காரம் போன்றவற்றை கைவிடும் வரை  ''பிரைன் லாரா, ராகுல் ராவிட், முத்தையா முரளிதரன், சச்சின் டெண்டுல்கர்''இவர்களுக்கு முன்னால் வெறும் கால் தூசி தான்!!

2 comments:

Unknown said...

இது எல்லாருக்கும் பொருந்தும்

Unknown said...

அண்ணன் விராட் கோலி ரசிகன் என்பதை சொல்ல வருகிறார் போலும்
நன்றி அண்ணன்!!