Friday, May 10, 2013

சும்மா பார்த்த 'சென்னையில் ஒரு நாள்'


பொதுவாக நான் திரைப்படங்களை எதிர்பார்ப்புக்களோடு பார்ப்பதில்லை. ஏதோ சும்மா ஒரு பொழுது போக்குக்காகத்தான் பார்ப்பேன். திரையரங்குகளுக்கும் செல்வது மிகக்குறைவு. தொலைபேசிக்கு மீள்நிரப்ப போகும் போது கடைக்காரரிடம் சில ஒரிஜினல் DVDகளை வாங்கி வருவது வழமை. அவ்வாறுதான் சென்னையில் ஒருநாள் படம் பார்த்த கதையும் கூட. படத்தை வாங்கி வந்து கிட்டத்தட்ட பத்து நாட்களாகிவிட்டது. நேற்று இரவு IPL போட்டி தூக்கம் வர வைத்ததால் 'சென்னையில் ஒரு நாள்' என் கண்ணில் பட்டது.



 படம் ஆரம்பித்தவுடன் பாடல் ஒவ்வொரு திசையிலும் ஒவ்வொருவரின் கதை என்று சற்று போ(டி)ராகவே ஓடியது. ஒரு பக்கம் தான் சண் டிவியில் ஒரு சிறந்த நிருபராக வர வேண்டும் என்று நினைத்துபின்னர் அந்த சந்தர்பம் கிடைத்த மகிழ்ச்சியில் ஒரு இளைஞன். மிகவும் பிரபலமான 'சயினிங் ஸ்டார்' என்னும் பட்டத்தோடு வளம் வரும் நடிகராக பிரகாஸ்ராஜ். அடுத்து ஆரம்பத்தில் நான்கு ஐந்து பைக்குகளில் ரௌடிகள் போல ஒரு காரில் செல்லும் பெண்ணை துரத்துகிரார்கள் சிலர். மறுபக்கம் குடும்ப சூழ்நிலைகளினால் லஞ்சம் வாங்கி அசிங்கப்பட்டு வேலை இடைநிறுத்தம் செய்யப்பட்ட ட்ராபிக் கான்ஸ்டபிள் ஆக சேரன். இவர்களா எல்லோருமாக காலை எட்டு மணியில் இருந்து மாலை நான்கு மணிவரை சென்னையில் சந்திக்கும் விபரீதமான விளையாட்டுக்கள் நிறைந்த படம் தான் சென்னையில் ஒரு நாள். இதிலே வைத்தியர் ஆக வரும் பிரசன்னாவும் பிரகாஸ்ராஜ்சின் மனைவியாக வரும் ராதிகாவும் கண்ரோல் ரூமில் இருந்தபடியே கண்களில் பயம் காட்டும் சரத்குமாரும் அசத்தியிருப்பது படத்துக்கு மிகப்பெரிய பலம்.


சேரனே படத்தின் முக்கிய திருப்புமுனையாக திகழ்கிறார். நடிப்பில் என்பதை விட வாகனம் செலுத்துவதில் சாரதியாய் சாதித்து தன் களங்கத்தை துடைத்து சாந்தம் காட்டுகிறார்.

சற்று தூக்கலாகவே முதல் முப்பது நிமிடங்கள் ஓடினாலும் அடுத்துவரும் முக்கால்வாசியும் நம்மை திக்குமுக்காட வைப்பது எதிர்பார்க்காத விறுவிறுப்பு.

இங்கே நான் கதையை கூற விரும்பவில்லை. இது விமர்சனம் கூட இல்லை. போ(B)ர் அடிக்கிறதே என்று இரவு பதினோரு மணிக்கு பின்னர் போட்ட படம் தூங்க சென்றும் தூக்கத்தை தடுத்து என்னை அதை பற்றியே சிந்திக்க வைத்ததால் இங்கே பகிர்கின்றேன். பார்க்காதவர்கள் ஒரு முறை பாருங்கள் நிச்சயம் பிடிக்கும்!!  நல்ல படங்களை மிஸ் பண்ணிடாதீங்க :-)


No comments: