Monday, May 13, 2013

புயலுக்கு இன்னும் நான்கு மணிநேரம்....


என்னய்யா இது புயல் எச்சரிக்கை விடுக்கின்றானே என்று ஜோசிக்காதீங்க பாஸ்! நேற்றிரவு எனக்கு மட்டுமல்ல யாழில் இருக்கும் அநேகமாநோருக்கு  கடினமான அனுபவத்தை வழங்கியதாக அமைந்திருக்கும்.யாழ் மற்றும் முல்லைத்தீவு பகுதிகளை 70 KM வேகத்தில் புயல் தாக்கவுள்ளதாக வெளியான செய்தியால் பலர் பதற்றமடைந்தனர். இது சில இணையத்தளங்களிலேயே நேற்றிரவு முழுமை பெறாதஇ  தகவல்களை உள்ளடக்கி இருக்காதஇ தெளிவில்லாத செய்தியாக வெளியாகியமையால் பலரும் சந்தேக கண்கொண்டே பார்த்தனர்.



இரவு 11.00

ஆமை வேகத்தில் ஆடிய  ஷேன் வட்சன் திடீரென்று அடித்த ஆறு சிக்சர்களை பார்த்துவிட்டு சூரியனின் நேற்றைய காற்று காதுக்குள் ரீங்காரம் இசைக்க தூக்கம் கண்களை மெல்ல வருடியது. என் மண்டைக்கு நேரெதிரே உஷா சுழன்று ஆடிக்கொண்டிருந்தாள். அவள் இல்லையென்றால் இந்தக்காலந்தில் நிம்மதியாய் தூங்க முடியாது என்று எனக்கு நேற்றுவரை தெரிந்திருக்க வாய்ப்பில்லை.ஹலோ! நில்லுங்க சார் ( உஷா என்றால் - USHA  நிறுவனத்தின் பா(f)ன் ''காற்றாடி'') இந்த காலத்தில் எதையும் தெளிவா சொல்லிப்புடனும் பாருங்கோ. அதுதான்.
இரவு 01.45      

காலையில் எழும்பவில்லை என்று அம்மா தண்ணீரை உடலெல்லாம் ஊற்றிவிட்டாரோ என்று எண்ணிக்கொண்டு எழுந்தால் வியர்வை என்னை குளிப்பாட்டிக்கொண்டிருந்தது. ஒரு லட்சம் வியர்வை துளிகள் என்னுடலில் துள்ளி விளையாடின. மேலே அண்ணார்ந்து பார்த்தால் உஷா அன்னாராகி விட்டதை உணர முடிந்தது. அதுதானப்பா கரண்டு நின்று போச்சு.கைத்தொலைபேசியின் வெளிச்சத்தில் வீட்டின் அனைத்து பகுதிகளையும் பலமுறை வளம் வந்தன என் கால்கள். ஒரு நிமிடத்தில் அரபு நாட்டு பாலைவனத்தில் தடம் மாறிய பயணியாக என்னை நான் உணர்ந்தேன். அந்த அளவு வெப்பத்தை கக்கிக் கொண்டிருந்தன பூமி 10 வானம் 10 காற்று எல்லாமே!! இந்த நேரத்தில் கடவுளாக தெரிந்தது ஒரு விசிறி மட்டை மாத்திரமே. நேற்றிரவு படித்திருந்த புயல் எச்சரிக்கை செய்து அப்போது கவலையை தந்திருந்தாலும் இப்போது எனக்கு புயல் அடித்தால் என்ன என்று சொல்லும் அளவுக்கு உடபெல்லாம் அடுப்பில் வைத்த தண்ணீர் போல கொதித்தது. காண்டாவனம் என்றால் என்னவென்று நேற்றைய இரவுப்பொழுது காட்டிச்சென்றது. அடக்கமுடியாத அனலில் கதவைத் திறக்க எனக்கு திறக்க சற்று பீதியாய் இருந்தது. வெளியே இரண்டு நாய்கள் கும்மிருட்டில் குலைத்துக்கொண்டு திகில் மூட்டின. காலையில் பேசுகின்ற வீர வசங்களை இரவில் அதுவும் மின்சாரம் இல்லாத நேரங்களில் எந்த வீரனாலும் பேச முடிவதில்லை என்பதை முதல் முதலில் வீட்டுக்குளேயே அனுபவ ரீதியில் உணர்த்திய நாள் அது.
 நேரம் 02.59

மின்சாரத்தை எதிர்பார்த்து விழிகள் இருளோடு சங்கமமாகின. இத்தனைக்கும் வீட்டில் அனைவரும் அமைதியாகவும் ஆர்பாட்டம் இல்லாமலும் உறங்கிகொண்டிருந்தது ஆச்சரியத்தையும்  வரவழைத்தது. கைத்தொலைபேசி மீதியாக வைத்திருந்த கொஞ்சநஞ்ச சார்ஜையும் ஒளிர்ந்துகொண்டிருந்த அதன் மின்குமிழ் உறிஞ்சி குடித்து தீர்த்தது. ஆத்தாக்கொடுமை என்பார்கள் அதன் எல்லைக்கு சென்ற நான் இறுதியாக பேஸ்புக்கில் ஒரு நிலைத்தகவலை போட்டு மீன்கார சபைமேல் உள்ள என் ஒட்டுமொத்த ஆதங்கத்தையும் தீர்த்ததாக எண்ணினேன். ஆனால் ஒரு டவல் தோய்த்து போட்டது போல  என்னால் தடுக்க முடியவில்லை.

நேரம் காலை : 03.45

இருளுடனும் வியர்வையுடனும் தூக்கத்துடனும் எரிச்சல் வெறுப்பு போன்றவைகளுடனும் போராடி தோல்வியுற்று கதிரையில் சாய்ந்தேன். கடவுள் என்னை அழைத்தது போல உஷா ஓட ஆரம்பித்த சத்தம் என் காதுகளை எட்ட கண் முன்னே இருந்த மங்கல் ஒளி மின்குமிழ் (டிம் பல்ப்) ஒளிர ஆரம்பித்து. என்ன கொடுமை சார் என்னும் அளவுக்கு இந்த சிறிய விடயம் இரண்டு மணி நேரத்தில் என்னை ஆட்டிப்படைத்தது சற்று வேடிக்கையான விடயமும் கூட. இதை நான் பகிர வேண்டும் என்று நினைத்தது இச்சம்பவம் இடம்பெற்றுக்கொண்டிருந்தபோது. பட்ட வலி சிறிதோ பெரிதோ பகிர்வதே எம் கடமை(:p)
மீண்டும் சௌகர்யமான தூக்கம் ஆரம்பம். ஆனால் எனது அப்பா தொழில் நிமித்தம் எழுவது என் காதுகளுக்கு தெரிந்தது. அப்போதே உணர முடிந்தது தூக்கம் என்றால் என்னவென்று.

நேரம் காலை: 06.15

குளிர்வது போல ஒரு உணர்வு எழுந்து பார்த்தால் புயலும் மழையும் பூமியை குளிர்வித்துகொண்டிருந்தன.  இந்த நேரத்தில்  இரண்டு மணிநேரத்துக்கு முன்பு வரை ஆட்டிப்படைத்த வெப்பம் என்னும் அரக்கன் தண்ணீரில் குளிக்கவார்க்கப்பட்டும் புயலினால் அடித்தும் செல்லப்பட்டான் கூடவே தோட்டம் செய்வோரின் வருமானத்தையும்!!

ரிஸ்க் ஆனாலும் லை(f)ப் ஜாலி பாஸ் - என்ஜாய் மகனே என்ஜாய் :-)


No comments: