Sunday, January 22, 2012

அப்துல் கலாமின் யாழ் வருகை

இந்திய தேசத்தின் முன்னாள் குடியரசு தலைவர் டாக்டர் அப்துல்கலாம் இன்று யாழ்பாணம் வருகை தருகிறார்.
ஒரு பெரும் விஞ்ஞானியை - நேர்மையானவரை தமிழ் மக்கள் அன்போடு வரவேற்கின்றனர்.

அணு விஞ்ஞானி அப்துல்கலாம் ஒருகாலத்தில் யாழ்ப்பாணம் வந்தார் என்று பெருமைப்படக்கூடிய  வரலாறு அவரின் வருகையால் பத்வாகின்றது..
கற்றோர்க்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு என்ற உயர் வாசகத்துக்கு எடுத்துகாட்டாக விளங்கும் டாக்டர் அப்துல்கலாம் மதம்,மொழி,இனம் என்ற எல்லைகளை கடதவராய் மானிடத்தை மதிக்கின்ற நல்லவராய் தத்துவஞானியாய் விளங்குகிறார்.)
அவரின் வாழ்வியல்,அறிவியல்,கல்வியியல்,சமூகவியல் தொடர்பில் எங்கள் தமிழ் மாணவர்கள் சற்று சிந்திக்க வேண்டும்.
''இளைஞர்களே கனவு காணுங்கள்
             உறக்கத்தில் அல்ல நிஜ வாழ்வில்'' என்ற அப்துல்கலாமின் பொன்மொழியால் நம் இளம் சமுதாயம் வளம் பெற்று மிளிர வேண்டும்..
இவ்வாறன ஒரு மகத்தான மனிதர் இன்று யாழ் மண்ணை நோக்கி வருவதையிட்டு மகிழ்ச்சியடைந்து இச்சிறு பதிவை வரைந்தேன்..நன்றி.) 
அன்புடன் குமரன்.*


No comments: